Advertisement
Advertisement
Advertisement

பிளேயிங் லெவனில் யாருக்கு இடம் - ரோஹித் சர்மாவின் பதில்!

இந்திய அணியின் பிளேயிங் லெவனில் பல குழப்பங்கள் இருக்கும் நிலையில், இந்த கேள்விகளுக்கு ரோஹித் சர்மா தற்போது பதிலளித்துள்ளார்.

Advertisement
Gill And Surya...: Rohit Sharma On India's Playing XI Ahead Of 1st Test vs Australia In Nagpur
Gill And Surya...: Rohit Sharma On India's Playing XI Ahead Of 1st Test vs Australia In Nagpur (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Feb 08, 2023 • 06:19 PM

நாளை இந்தியா, ஆஸ்திரேலியா பங்கேற்கும் 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் தொடங்கி நடைபெறவுள்ளது. பிப்ரவரி 9-13, 17-21 மற்றும் மார்ச் 1-5, 9-13 ஆகிய தேதிகளில் போட்டிகள் நடைபெறவுள்ளன.

Bharathi Kannan
By Bharathi Kannan
February 08, 2023 • 06:19 PM

இந்த டெஸ்ட் தொடரில் ரிஷப் பந்த் பங்கேற்கவில்லை. மேலும், ஸ்ரேயஸ் ஐயரும் காயம் காரணமாக முதல் போட்டியில் விளையாடவில்லை. இதனால், இந்திய டெஸ்ட் அணியின் மிடில் வரிசையில் பெரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. மேலும், ரிஷப் பந்த் இடம் இஷான் கிஷனுக்கு கிடைக்குமா? அல்லது கேஎஸ் பரத்துக்கு கிடைக்குமா? என்ற கேள்வியும் இருக்கிறது.

Trending

அதுமட்டுமல்ல, துணைக் கேப்டன் கேஎல் ராகுல் ஓபனராக களமிறங்க வாய்ப்புள்ளது என்பதால், முரட்டு பார்மில் இருக்கும் ஷுப்மன் கில் மிடில் வரிசையில் களமிறங்க வேண்டிய நெருக்கடியும் இருக்கிறது. இதோடு சேர்ந்து இந்திய அணியின் பந்துவீச்சு துறையிலும் ஒரு குழப்பம் இருக்கிறது. தற்போதுவரை அஸ்வின், ஜடேஜா, ஷமி, சிராஜ் ஆகியோரின் இடம் உறுதியாகிவிட்டது. ஆனால், கடைசி இடத்திற்கு குல்தீப் யாதவ், அக்சர் படேல் ஆகியோருக்கு இடையில் போட்டி நிலவி வருகிறது.

இப்படி பல குழப்பங்கள் இருக்கும் நிலையில், இந்த கேள்விகளுக்கு ரோஹித் சர்மா தற்போது பதிலளித்துள்ளார். மிடில் வரிசையில் சூர்யகுமார் யாதவ், ஷுப்மன் கில் இருவரில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற கேள்விக்கு பதிலளித்த ரோஹித், “ஷுப்மன் கில் தற்போது சிறந்த பார்மில் இருக்கிறார். ஆகையால், அவரை புறக்கணிப்பது கடினம். 

அதே நேரத்தில், சூர்யகுமார் யாதவ் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர் என்பது நமக்கு தெரியும். இந்த இருவரில் ஒருவருக்குத்தான் நாளைய போட்டியில் வாய்ப்பு கிடைக்கும். யாருக்கு இடம் என்பதை இன்னமும் முடிவுசெய்யவில்லை

ரிஷப் பந்தை மிகவும் மிஸ் செய்கிறோம். இருப்பினும், இவரது இடத்தை நிரப்பும் அளவுக்கு இந்திய அணியில் வீரர்கள் இருக்கிறார்கள். ஆகையால் பிரச்சினை இல்லை. இந்திய அணியில் இடம்பெற்றுள்ள 4 ஸ்பின்னர்கள் அஸ்வின், ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ் ஆகிய நான்கு பேரும் திறமையானவர்கள். 

பிட்சின் தன்மைக்கு ஏற்பட நான்கு பேரில் யார் யாருக்கு இடம் கிடைக்கும் என்பது தெரிய வரும். நான்கு பேரும் சிறந்தவர்கள் என்றால், சுழற்பந்து வீச்சு துறை குறித்து எந்த கவலையும் இல்லை” எனக் கூறினார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement