X close
X close

உம்ரான் மாலிக்கு ஏன் வாய்ப்பு தரவில்லை - பிரெட் லீ!

உம்ரான் தொடர்ந்து போட்டிகளில் விளையாடினால் தான் அவரால் முன்னேற்றம் காண முடியும் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிரெட் லீ தெரிவித்துள்ளார். 

Bharathi Kannan
By Bharathi Kannan March 23, 2023 • 13:22 PM

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 21 ரன்கள் வித்தியாசத்தில் ரோஹித் சர்மா படை தோல்வியை தழுவி இருக்கிறது. இதன் மூலம் தொடரையும் இந்திய அணி இழந்தது. முதல் ஒருநாள் போட்டியில் சிறப்பாக பந்து வீசிய இந்திய அணி அடுத்த இரண்டு ஒரு நாள் போட்டிகளிலும் சோபிக்க தவறியது. 

குறிப்பாக கடைசி ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி விக்கெட்டுகளை விரைவில் இழந்த நிலையில் அவர்களை 269 ரன்கள் அடிக்க விட்டது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. சமி மற்றும் சிராஜ் ஆகியோரின் பந்து வீச்சை ஆஸ்திரேலியா வீரர்கள் சிறப்பாக எதிர் கொண்டனர்.இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரேட் லி, உம்ரான் மாலிக்கு ஏன் வாய்ப்பு தரவில்லை என்று கேள்வி எழுப்பி உள்ளார். 

Trending


இது குறித்து பேசிய அவர் உம்ரான் மாலிக், “ஒரு சிறந்த பந்து வீச்சாளர். அவருக்கு தனி திறமைகள் நிறைய இருக்கிறது. உம்ரான் மாலிக்கை சரியாக கையாண்டால் அவர் பல அதிசயங்களை இந்தியாவுக்காக நிகழ்த்துவார். அவர் இந்திய அணிக்காக ஒருநாள் டெஸ்ட் டி20 என மூன்று கிரிக்கெட்டிலும் விளையாட திறமை இருக்கிறது. 

ஆனால் இந்திய அணி அவரை சரியாக பயன்படுத்த வேண்டும். உம்ரான் மாலிக்கை அதிகமாக பந்து வீச அனுமதிக்க இல்லை. உம்ரான் தொடர்ந்து போட்டிகளில் விளையாடினால் தான் அவரால் முன்னேற்றம் காண முடியும். தொடர்ந்து இரண்டு போட்டிகளுக்கு ஒரு முறை உம்ரான் மாலிக்கிற்கு ஓய்வு வழங்காதீர்கள். உம்ரான் மாலிக்கை உடற்பயிற்சி கூடத்திற்கு அனுமதிக்காதீர்கள். வேகப் பந்துவீச்சாளர்கள் பெரிய இடையை தூக்கி உடலை கட்டுமஸ்தான் போல் வைத்திருக்கக் கூடாது.மாறாக அவரை ஓட சொல்லுங்கள் அவருடைய கால் தசைகள் பலமானால் மட்டுமே காயம் இன்றி விளையாட முடியும்” என்று தெரிவித்துள்ளார்.

உம்ரான் மாலிக் இந்திய அணிக்காக 8 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 13 விக்கெட்டுகளையும் , 8 டி20 போட்டிகளில் விளையாடி 11 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா இந்த தொடரில் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக முதல் போட்டியில் சர்துல் தாக்கூரையும் அடுத்த இரண்டு போட்டிகளில் ஹர்திக் பாண்டியாவையும் தான் பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.


Win Big, Make Your Cricket Tales Now