
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தொடருக்கு முன்னதாக ஐபிஎல் அணிகள் கலைக்கப்பட்டு வீரர்களுக்கான மெகா ஏலமும் இந்தாண்டு டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதனால் இந்த ஏலத்தில் எந்தெந்த வீரர்களை ஐபிஎல் அணிகள் தக்கவைக்கும் மற்றும் எந்தெந்த வீரர்களை தேர்வு செய்யும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.
இதன் ஒருபகுதியாக அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடருக்கு தற்போதில் இருந்தே ஐபிஎல் அணிகள் பணிகளை மேற்கொண்டு பல்வேறு மாற்றங்களை செய்து வருகின்றனர். இந்நிலையில் எதிர்வரும் ஐபிஎல் தொடரில் முன்னாள் சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியானது மூன்று அல்லது நான்கு வீரர்களை மட்டுமே ஏலத்திற்கு முன்பு தக்கவைக்கும் என்று தன்னுடைய கணிப்பை முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள அவர், “குஜராத் டைட்டன்ஸ் அணியைப் பற்றி பேசினால், அவர்கள்த் தக்கவைத்துக்கொள்ள அவர்களுக்கு பல வாய்ப்புகள் இருப்பதாக நான் நினைக்கவில்லை. அதனால் நிச்சயம் இரண்டு அல்லது மூன்று வீரர்களை மட்டும் தக்க வைத்துக் கொண்டு மீதி வீரர்களை அணியில் இருந்து விடுவிப்பார்கள் என்று நம்புகிறேன். அதன்பின் தேவைப்படும் வீரர்களை ஆர்டிஎம் மூலமாகும், ஏலத்தில் இருந்து சில நல்ல வீரர்களை தேர்வு செய்யவும் முயற்சிப்பார்கள்.