
ஐபிஎல் என்றழைக்கப்படும் இந்தியன் பிரீமியர் லீக் தொடர் வெற்றிகரமாக 16 சீசன்களை கடந்து 17ஆவது சீசனை எதிர்நோக்கி காத்திருக்கிறது. அதன்படி வரும் மார்ச் மாதம் இறுதியில் இத்தொடர் தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதனால் இத்தொடரில் பங்கேற்கும் அணிகள் தற்போதிலிருந்தே தங்களது பயிற்சிகளை தொடங்கியுள்ளன.
மேலும் நடப்பாண்டு ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரும் நடைபெறவுள்ளதால், அத்தொடருக்கு முன்னதாக வீரர்கள் தங்களது திறனை நிரூபிப்பதற்கான இடமாக நடப்பு ஐபிஎல் தொடர் இருக்கவுள்ளது. மேலும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்படும் வீரர்களைக் கொண்ட டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியும் தேர்வு செய்யப்படவுள்ளதாக பிசிசிஐயும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மேத்யூ ஹைடன், டேல் ஸ்டெயின், வாசிம் அக்ரம் மற்றும் டாம் மூடி ஆகியோர் அடங்கிய முன்னாள் வீரர்கள் ஐபிஎல் தொடரின் ஆல் டைம் சிறந்த பிளேயிங் லெவனை தேர்வு செய்து அறிவித்துள்ளனர். அவர்ள் தேர்வு செய்த இந்த அணியில் ஐந்து பேட்ஸ்மேன்கள், ஒரு விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன், இரண்டு ஆல்-ரவுண்டர்கள் (ஒரு வேகப்பந்து வீச்சாளர் மற்றும் மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் ஆல்ரவுண்டர்), ஒரு சுழற்பந்து வீச்சாளர் மற்றும் இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர்.