Advertisement
Advertisement
Advertisement

அணியின் தலைமை பொறுப்பிற்கான தேர்வில் அவர் எப்போதும் இருக்கிறார் - பும்ரா குறித்து ரோஹித் சர்மா!

இந்திய அணியின் துணைக்கேப்டனாக ஜஸ்பிரித் பும்ரா நியமிக்கப்பட்டது குறித்து, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு குறித்தும் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா சில கருத்துகளை தெரிவித்துள்ளார்.

Advertisement
அணியின் தலைமை பொறுப்பிற்கான தேர்வில் அவர் எப்போதும் இருக்கிறார் - பும்ரா குறித்து ரோஹித் சர்மா!
அணியின் தலைமை பொறுப்பிற்கான தேர்வில் அவர் எப்போதும் இருக்கிறார் - பும்ரா குறித்து ரோஹித் சர்மா! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Oct 15, 2024 • 09:02 PM

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது நாளை (அக்டோபர் 16) முதல் தொடங்குகிறது. அதன்படி இத்தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன, 

Bharathi Kannan
By Bharathi Kannan
October 15, 2024 • 09:02 PM

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில், இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றார். அப்போது இந்திய அணியின் துணைக்கேப்டனாக ஜஸ்பிரித் பும்ரா நியமிக்கப்பட்டது குறித்து, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு குறித்தும் சில கருத்துகளை தெரிவித்துள்ளார்.

Trending

இதுகுறித்து பேசிய ரோஹித் சர்மா, “ஜஸ்பிரித் பும்ரா நிறைய கிரிக்கெட் விளையாடியுள்ளார். அவருடன் நானும் நிறைய கிரிக்கெட் விளையாடியுள்ளேன். அவர் விளையாட்டை நன்றாக புரிந்துகொள்கிறார். அவரிடம் பேசும் போது அவர் ஆட்டத்தை நன்றாக புரிந்துகொண்டு அதற்கேற்றவாரு செயல்படுவார். மேலும் அவர் அதிக போட்டிகளில் கேப்டனாக செயல்படாததால், அது குறித்து என்னால் அதிகம் சொல்ல முடியாது. ஏனெனில் அவர் ஒரு டெஸ்ட் போட்டி மற்றும் இரண்டு டி20 போட்டிகளில் மட்டுமே கேப்டனாக இருந்துள்ளார்.

அனால் அணிக்கு என்ன தேவை என்பதை அவர் புரிந்துகொண்டு செயல்படும் ஒரு வீரராக இருக்கிறார். நீங்கள் முன்னேற ஒரு தலைவர் தேவைப்படும் சூழ்நிலையில் நீங்கள் இருக்கும்போது, ​​​​பும்ரா அவர்களில் ஒருவராக இருப்பார் என்று நான் நினைக்கிறேன். எனவே, இனி வரும் காலங்களில், எங்கள் அணியின் தலைமை பொறுப்பிற்கான தேர்வில் அவர் எப்போதும் இருக்கிறார். எனவே அவர் உள்நாட்டில் நடைபெறும் போட்டிகளீல் சக வீரர்களிடம் விவாதிப்பதும் சரியான விஷயமாக இருக்கும்” என்று தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர், “இந்திய அணியின் பேட்டிங்கை பொறுத்தவரை நிறைய தேர்வுகள் இருக்கின்றன. அதேபோல் பந்துவீச்சிலும் அதிக வீரர்களை உருவாக்க நாங்கள் விரும்புகிறோம். அதிக அளவில் பந்துவீச்சாளர்கள் இருக்கும்போது, ஏதெனும் ஒரு வீரருக்கு காயம் ஏற்பட்டாலும் அதுகுறித்து கவலையடையத் தேவையில்லை. பந்துவீச்சில் சில வீரர்களை மட்டும் அதிக அளவில் நம்பியிருக்க நாங்கள் விரும்பவில்லை. அது சரியான விஷயமும் இல்லை.

அணியின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு நிறைய சிறந்த பந்துவீச்சாளர்களை உருவாக்க வேண்டும். தற்போதுள்ள அணியில் இளம் பந்துவீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளனர். அவர்களுக்கு சில போட்டிகளில் விளையாடிய அனுபவம் இருக்கிறது. மேலும் அவர்கள் துலிப் கோப்பை, இரானி கோப்பை போன்ற உள்ளூர் தொடர்களிலும் தொடர்ச்சியாக விளையாடி வருகின்றனர். அதனால் அவர்களின் சரிவர காண்காணிப்பது அவசியம்” என்று தெரிவித்துள்ளார். 

Also Read: Funding To Save Test Cricket

இந்திய டெஸ்ட் அணி: ரோஹித் சர்மா (கே), ஜஸ்பிரித் பும்ரா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மான் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், சர்ஃப்ராஸ் கான், ரிஷப் பந்த், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ் , முகமது சிராஜ், ஆகாஷ் தீப்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement