
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், உலக கிரிக்கெட்டின் ஜாம்பவான்களில் ஒருவருமான விராட் கோலி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாஅக இன்று அறிவித்து, பல முன்னாள் இன்னாள் வீரர்களுக்கும், ரசிகர்களுக்கும் பேரதிர்ச்சியை கொடுத்துள்ளார்.
அதிலும் குறிப்பாக இங்கிலாந்து டெஸ்ட் தொடர் அடுத்த மாதம் தொடங்க இருக்கும் நிலையில் விராட் கோலியின் ஓய்வு முடிவானது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விராட் கோலி விட்டுச்சென்ற இடத்தை யார் நிறப்புவார் என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்திருக்கும் விராட் கோலிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது. அவற்றுள் சில..,
விராட் கோலியின் ஓய்வு குறித்து இந்திய அணியின் தலைமை பாயிற்சியாளர் கௌதம் கம்பீர் தனது எக்ஸ் பதிவில், “சிங்கத்தைப் போன்ற பேரார்வம் கொண்ட ஒரு மனிதன்! உங்களை மிஸ் செய்வோம் விராட் கோலி” என்று பதிவிவிட்டுள்ளர்.