
டி20 உலகக்கோப்பை தொடருக்கு பிறகு சர்வதேச டி20 போட்டிகளில் சீனியர் வீரர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகிய இருவரும் எடுக்கப்படாதது குறித்து முன்னாள் வீரர்கள் மற்றும் ஜாம்பவான்கள் பலரும் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
ஜூலை மாதம் தொடக்கத்தில் புதிய தேர்வுக்குழு தலைவராக இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் அஜித் அகர்கர் தேர்வு செய்யப்பட்டார். இவர் சீனியர் வீரர்களுக்கு மதிப்பளித்து டி20 போட்டிகளிலும் வாய்ப்புகள் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இவரும் ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட சில சீனியர் வீரர்களை டி20 போட்டிகளுக்கு எடுக்கவில்லை.
இந்நிலையில் இவர்கள் இருவரும் எடுக்கப்படாததற்கு முன்னாள் இந்திய அணியின் கேப்டன் மற்றும் முன்னாள் பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி தன்னுடைய சமீபத்திய பேட்டியில் கருத்து தெரிவித்திருக்கிறார்