
இந்திய அணியில் தற்போது தவிர்க்கவே முடியாது, என்ன ஆனாலும் அவர் ஆடியே தீர வேண்டும் என்ற பெருமையை பெற்றிருப்பவர் சூர்யகுமார் யாதவ். டி20 கிரிக்கெட்களில் இந்தாண்டு அவர் காட்டிய அதிரடி ஏராளம். டி20 உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்களை அடித்த வீரர், நியூசிலாந்துக்கு எதிரான சமீபத்திய சதம் என அடுத்தடுத்து அதிரடி காட்டுவதால் இந்தியாவின் 360 டிகிரி என்றே அவருக்கு பெயர் உறுதியாகிவிட்டது.
இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரே தற்போது 3 பேரை சுற்றியுள்ளது என்பது போல மாறியுள்ளது. ஓப்பனிங்கில் ரோஹித் அடித்துவிட்டால், மிடில் ஆர்டரில் விராட் கோலி - சூர்யகுமார் யாதவ் ஆகியோரின் பார்ட்னர்ஷிப் மளமளவென் ரன்களை உயர்த்திவிடுகிறது. இதனால் அடுத்தமுறையாவது கோப்பையை வென்றுவிட வேண்டும் என ரசிகர்கள் கோரி வருகின்றனர்.
இந்நிலையில் இதுகுறித்து பேசிய சூர்யகுமார் யாதவ், "உண்மையை சொல்ல வேண்டும் என்றால் ரோஹித் மற்று விராட் கோலி போன்றோருடன் ஓய்வறையை பகிர்ந்துக்கொள்வதில் நான் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும். அவர்கள் இருவருமே சர்வதேச கிரிக்கெட்டின் இரு பக்கங்கள். அவர்கள் சாதித்த விஷயங்களை நான் நெருங்குவேனா என்பது கூட எனக்கு தெரியாது.