
ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான மினி ஏலம் முடிவடைந்ததில் இருந்து லக்னோ அணி மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. ஏனென்றால் அந்த அணி தரப்பில் சிவம் மாவியை ரூ.6.4 கோடிக்கும், அர்ஷின் குல்கர்னி ரூ.20 லட்சத்திற்கு, தமிழக வீரர் சித்தார்த் ரூ.2.4 கோடிக்கும், ஆஷ்டன் டர்னர் ரூ.1 கோடிக்கும், டேவிட் வில்லி ரூ.2 கோடிக்கும், முகமது அர்ஷத் கான் ரூ.20 லட்சத்திற்கும் வாங்கப்பட்டனர்.
இதுமட்டுமல்லாமல் ராஜஸ்தான் அணியில் இருந்த தேவ்தத் படிக்கல் லக்னோ அணி ட்ரேட் செய்யப்பட்டார். இதன் மூலம் வரும் ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் மிடில் ஆர்டரில் களமிறங்கவுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் விக்கெட் கீப்பர் பணியையும் மேற்கொள்ள உள்ளதாகவும் லக்னோ அணி நிர்வாகத்துடன் பேசியிருக்கிறார்.
ஏற்கனவே இந்திய அணியை மிகச்சிறப்பாக வழிநடத்திய கேஎல் ராகுல், முன்பை விடவும் அதிக தெளிவுடனும் அணிக்கு என்ன தேவை என்ன என்பதை அறிந்தும் விளையாடி வருகிறார். சமீபத்தில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதம் விளாசி அனைவரின் கவனத்தையும் தன்பக்கம் திருப்பியுள்ளார்.