
இந்தியாவிற்காக பல வெற்றிகளை பெற்றுத் தந்துள்ளேன், ஐசிசி தொடர்களில் இறுதிப் போட்டிகள் வரை அழைத்துச் சென்று இருக்கிறேன் ஆனாலும் நான் வெற்றிகரமான கேப்டன் இல்லை என்று கூறினார்கள் என விராட் கோலி வருத்தத்துடன் பேசியுள்ளார்.
மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி ஐசிசி-யின் அனைத்து கோப்பைகளையும் பெற்றது. இதன் மூலம் புதிய சாதனையையும் தோனி படைத்தார். தோனி, கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய பிறகு, அந்த பொறுப்பிற்கு விராட் கோலி வந்தார். இவர் மீது எதிர்பார்ப்பும் அதிகமாக இருந்தது. ஆனால் எந்தவித ஐசிசி கோப்பையையும் பெற்றுத் தரவில்லை. இதனால் கோலி வெற்றிகரமான கேப்டன் இல்லை என்று விமர்சிக்கப்பட்டார்.
ஆனாலும் விராட் கோலி தலைமையில் சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டி வரை சென்றது இந்திய அணி. ஒருநாள் உலகக் கோப்பையில் அரையிறுதி போட்டி வரை சென்றது. ஐந்து முறை டெஸ்ட் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தையும் பிடித்து, மேஸ் கோப்பையை பெற்றது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வரை சென்றது.