
இந்தியாவில் புகழ்பெற்ற உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் ஒன்று விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடர். இத்தொடரின் நடப்பு சீசனானது எதிர்வரும் டிசம்பர் 21ஆம் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு ஜனவரி 18ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது. மொத்தம் 38 அணிகள் பங்கேற்கும் இத்தொடரானது 5 குழுக்களாக பிரிக்கபட்டு போட்டிகள் நடத்தப்படவுள்ளது.
இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் அணிகளை மாநில கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்து வருகின்றனர். அந்தவகையில் நடப்பு சீசன் விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடருக்கான மும்பை அணியை மும்பை கிரிக்கெட் சங்கம் இன்று அறிவித்துள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள மும்பை அணியில் நட்சத்திர வீரர் அஜிங்கியா ரஹானே கேட்டுக்கொண்டதன் பேரில் அவருக்கு இத்தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
இதன் கரணமாக ஸ்ரேயாஸ் ஐயர் மும்பை அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கொண்டு இந்த அணியில் சூர்யகுமார் யாதவ், ஷிவம் தூபே, ஷர்துல் தாக்கூர் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களும் தங்கள் இடங்களைப் பிடித்துள்ளனர். மேற்கொண்டு யு19 ஆசிய கோப்பை தொடரில் விளையாடி வந்த தொடக்க வீரர் ஆயூஷ் மாத்ரேவும் மும்பை அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேசமயம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திர வீரர் பிரித்வி ஷாவுக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.