
பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற் பந்துவீச்சாளர் சயீத் அஜ்மல் உலகின் நம்பர் ஒன் பந்துவீச்சாளராக வலம் வந்தவர் . குறிப்பாக டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தனது தூஸ்ராவின் மூலம் எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்தவர் . உலகின் நம்பர் ஒன் பந்துவீச்சாளராக இவர் விளங்கி வந்தாலும் அடிக்கடி பந்துவீச்சு தொடர்பான சர்ச்சைகளில் சிக்கி அதிலிருந்து மீண்டு வந்தவர். இவரது பந்து வீச்சு முறை ஐசிசி யின் விதிமுறைப்படி இல்லை எனக் கூறி 2009 ஆம் ஆண்டிலிருந்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இவருக்கு அறிவுறுத்தி வந்தது .
அப்போது தனது பந்துவீச்சு ஸ்டைலை மாற்றிக் கொண்டு மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வந்தார் சயீத் அஜ்மல். ஆனாலும் 2014 ஆம் ஆண்டு ஐசிசி இவரது பவுலிங் ஆக்சன் விதிமுறைகளின் படி இல்லை என்று கூறி மீண்டும் தடை செய்தது . தனது பந்துவீச்சு முறையை மாற்றுவதற்காக கால அவகாசம் எடுத்துக்கொண்ட சயீது அஜ்மல் தன்னால் முழுவதுமாக மாற்ற முடியவில்லை எனக்கூறி 2015 ஆம் ஆண்டு உலகக் கோப்பை காண பாகிஸ்தான் அணியில் இருந்து விலகினார்.
இதுவரை 113 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி இருக்கும் அவர் 184 விக்கெட்டுகளையும், 35 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 178 விக்கெட்டுகளையும், 64 டி20 போட்டிகளில் விளையாடி 85 விக்கெட் களையும் வீழ்த்தி இருக்கிறார் . மொத்தமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 448 விக்கெட்டுகளை குறைந்த கால இடைவேளையில் வீழ்த்தி உலகின் தலைசிறந்த சுழற் பந்துவீச்சாளர்களில் ஒருவராக விளங்கினார் .