
இந்தியா அணி வெஸ்ட் இண்டிஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இரண்டும் முடிவடைந்து இருக்கின்றன. டெஸ்ட் தொடரில் ஒரு போட்டி டிராவாக ஒரு போட்டியை வென்றும், ஒரு நாள் தொடரில் ஒரு போட்டியை தோற்று இரண்டு போட்டியில் வென்றும், இரண்டு தொடர்களையும் இந்திய அணி கைப்பற்றி இருக்கிறது.
இதற்கு அடுத்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஹர்திக் பாண்டியா தலைமையில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. இந்தத் தொடரின் முதல் போட்டி இன்று இரவு இந்திய நேரப்படி 7 மணிக்கு தொடங்கவுள்ளது. நடந்து முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் விளையாடினார்கள்.
அப்போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்யாமல் பந்து வீசி வெஸ்ட் இண்டீஸை 114 ரன்கள் சுருட்டிய காரணத்தால், இளம் வீரர்களை பரிசோதிக்கும் வாய்ப்பு வீணானது. இதன் காரணமாக இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டியில் ரோஹித் சர்மா, விராட் கோலி அணியில் சேர்க்கப்படவில்லை. இரண்டாவது போட்டியில் தோற்ற இந்திய அணி மூன்றாவது போட்டியில் சிறப்பாக விளையாடி தொடரையும் கைப்பற்றியது.