
நடப்பு உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்ல தவறினால் அடுத்த மூன்று உலகக்கோப்பையில் இந்திய அணியால் சாம்பியன் பட்டம் வெல்லவே முடியாது என முன்னாள் இந்திய வீரரான ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த சில தினங்களில் நிறைவடைய உள்ளது.
இந்த தொடரின் லீக் போட்டிகள் முடிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா மற்றும் நியூசிலாந்து ஆகிய நான்கு அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. முதல் அரையிறுதி போட்டியில் இந்திய அணியும், நியூசிலாந்து அணியும், இரண்டாவது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணியும், தென் ஆப்ரிக்கா அணியும் மோத உள்ளன.
கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியை போன்றே இந்த முறையும் இந்திய அணி அரையிறுதியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ளதால், இந்தியா – நியூசிலாந்து இடையேயான போட்டி மீது அதிகமான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.