
ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் இந்திய சுற்றுப்பயணத்தில் தற்போது நான்கு போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கோப்பை தொடரை முடித்துள்ளது. இந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என கைப்பற்றி நான்காவது முறையாக பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரை தன்வசப்படுத்தி சாதனைப் படைத்தது.
அதேசமயத்தில் ஆஸ்திரேலியா அணி மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற காரணத்தால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இன்னொரு புறத்தில் நியூசிலாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் செய்த இலங்கை அணி முதல் டெஸ்ட் போட்டியில் தோற்றதால் இந்திய அணியும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
ஜூன் மாதம் ஏழாம் தேதி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து லண்டன் ஓவல் மைதானத்தில் இந்த இரு அணிகளும் மோத இருக்கின்றன. இந்நிலையில் ஆஸ்திரேலிய இந்திய சுற்றுப்பயணத்தின் அடுத்த தொடராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி நாளை மும்பை வான்கடே மைதானத்தில் துவங்க இருக்கிறது.