
கடந்த 13 ஆண்டுகளில் இந்திய டெஸ்ட் அணியை நீங்கள் தேர்வு செய்தால் முதலில் உங்களுடைய மனதுக்கு வரும் பெயர் புஜாராவாக தான் இருக்கும். டிராவிட், லட்சுமனுக்கு பிறகு டெஸ்ட் போட்டியை மட்டும் விளையாடும் வீரராக புஜாரா திகழ்ந்தார். எப்போதெல்லாம் இந்திய அணி சிரமத்தில் சிக்குகிறதோ அப்போதெல்லாம் களத்தில் இறங்கி இந்திய அணியை காப்பாற்றும் நட்சத்திரமாக புஜாரா திகழ்கிறார்.
இந்திய அணி இன்னிங்ஸில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டாலும் ஒரு மெக்கானிக் போல் களம் இறங்கி அதனை சரி செய்வதே இவருடைய பணி. இந்த நிலையில் 35 வயதான புஜாரா நாளை தன்னுடைய 100ஆவது சர்வதேச டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய புஜாரா, “அஸ்வின் என்னை பிடிவாதக்காரர் என்று கூறியிருந்தார். ஆனால் என்னை பொறுத்தவரை நான் என்னுடைய விளையாட்டு முறை மற்றும் பழக்கவழக்கங்களில் கண்டிப்பாக இருக்கிறேன். நான் யோகா மற்றும் என் உடல் தகுதியை பேணி காக்க பயிற்சிகளை எடுத்து வருகின்றேன். சமூக வலைத்தளத்தை நான் பயன்படுத்துவது இல்லை. தொலைக்காட்சிகளில் என்னை பற்றி நல்லவிதமாக பேசினால் கூட நான் அதனை பார்ப்பதில்லை.