
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது, இரு அணிகள் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நாக்பூரில் நாளை தொடங்குகிறது. இந்த டெஸ்ட் போட்டிக்காக இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த தொடரை கைப்பற்றினால் தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியும் என்பதால் இந்திய அணி இதை கைப்பற்ற தீவிரமாக செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொடரை யார் கைப்பற்றுவார், யார் தொடர் நாயகன் விருது பெறுவார் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் டெஸ்ட் தொடர் குறித்து நிருபர்களுக்கு பேட்டி அளித்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், “தொடரில் விளையாட நான்கு டெஸ்ட் போட்டிகள் உள்ளன, நாங்கள் தொடரை வெல்ல விரும்புகிறோம். இது ஒரு சவாலான தொடராக இருக்கும், அதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும்.