Advertisement

இரண்டு இன்னிங்ஸ்களிலுமே எங்களுக்கு பெரும் சிக்கல் உருவாகின - ஹர்திக் பாண்டியா!

ஆஸ்திரேலிய அணியுடனான முதல் ஒருநாள் போட்டியை கடும் அழுத்தங்களுக்கு இடையே வென்றுள்ளதாகவும், நினைத்த திட்டங்கள் சொதப்பிவிட்டதாகவும் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan March 18, 2023 • 10:44 AM
IND Vs AUS: It Was Very Relaxing To Watch Rahul And Jadeja Bat, Says Hardik Pandya
IND Vs AUS: It Was Very Relaxing To Watch Rahul And Jadeja Bat, Says Hardik Pandya (Image Source: Google)
Advertisement

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி தொடக்கத்தில் நல்ல ஸ்கோரை எட்டிய போதும், இந்திய பவுலர்களின் இறுதிகட்ட போராட்டத்தினால் 188 ரன்களுக்கெல்லாம் அனைத்து விக்கெட்டையும் இழந்தது.

ஆஸ்திரேலியாவின் ஓப்பனிங் வீரர் மிட்செல் மார்ஷ் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் இணைந்து சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைத்து வந்தனர். ஒருபுறம் மார்ஷ் 65 பந்துகளில் 81 ரன்களும், ஸ்டீவ் ஸ்மித் 22 ரன்களையும் எடுத்து நன்கு செட்டிலாகி இருந்தனர். இதனால் 129/3 என்ற வலுவான நிலையில் அந்த அணி இருந்தது. எனினும் இந்திய பவுலர்கள் முகமது ஷமி மற்றும் சிராஜ் ஆகியோரின் போராட்டத்தால் 188 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்களையும் சாய்த்துவிட்டனர்.

Trending


மிக குறைந்த இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. இஷான் கிஷான் 3, சுப்மன் கில் 20, விராட் கோலி 4, சூர்யகுமார் 0 என அடுத்தடுத்து அவுட்டாகினர். கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவோ 25 ரன்களுக்கு நடையை கட்டினார். இதனால் 83 ரன்களுக்கெல்லாம் 5 விக்கெட்களை இழந்து திணறியது. அப்போது பொறுப்புடன் விளையாடி கேஎல் ராகுல் (75), ரவீந்திர ஜடேஜா (45) ஜோடி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இந்தியாவுக்கு வெற்றியை தேடி தந்தனர்.

இந்நிலையில் இந்த பரபரப்பு போட்டி குறித்து பேசிய கேப்டன் பாண்டியா, “2 இன்னிங்ஸ்களிலுமே எங்களுக்கு பெரும் சிக்கல் உருவாகின. எனினும் மிகவும் நிதானமாக அதனை கையாண்டு வெளியே வந்தோம். ஒருமுறை ஆட்டம் எங்களின் கைக்கு வந்தவுடன் அதனை இருக்கமாக பிடித்துக்கொண்டோம். ஜடேஜா தன்னால் என்ன முடியும் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்து காட்டிவிட்டார்.

கேஎல் ராகுலுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாட யாரும் இருக்க மாட்டார்களா? என நினைத்துக்கொண்டிருந்தோம். ஆனால் நீண்ட நாட்களுக்கு பிறகு 50 ஓவர் கிரிக்கெட்டிற்கு வந்துள்ள ஜடேஜா அதனை செய்துக்கொடுத்தார். மிகவும் பரபரப்புடன் போட்டி நடந்தது. அவர்களின் பேட்டிங் எங்களுக்கு நம்பிக்கையை கொடுத்தது. அதனை தொடர்ந்து கொண்டு செல்வோம். என்னுடைய பேட்டிங் மற்றும் பவுலிங்காலும் எனக்கு மகிழ்ச்சி தான்” என தெரிவித்துள்ளார். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement