1-mdl.jpg)
India Aim To Seal T20I Series As They Return To Edgbaston For 2nd T20I Against England (Image Source: Google)
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி சமன் செய்த நிலையில், தற்போது மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
இதில் முதல் டி20 ஆட்டத்தில் இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், 2ஆவது டி20 ஆட்டம் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இங்கிலாந்துக்கு கருதப்படுகிறது. இதனையடுத்து, இந்திய அணிக்கு விராட் கோலி, ரிஷப் பந்த், பும்ரா ஆகியோர் திரும்பியுள்ளதால் பிளேயிங் லெவனில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த், பிளேயிங் லெவனில் திரும்பியுள்ளதால், தொடக்க வீரர் இஷான் கிஷன் வெளியே செல்ல அதிக வாய்ப்புள்ளது. நம்பர் 3 வது வீரராக விராட் கோலி திரும்பியுள்ளதால், அந்த இடத்தில் சிறப்பாக விளையாடி சதம் விளாசிய தீபக் ஹூடாவை ஓபனிங்கில் களமிறக்கவும் அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.