
EN-W vs IN-W, 3rd ODI: இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றதன் மூலம் 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரைக் கைப்பற்றி அசத்தியுள்ளது.
இந்திய மகளிர் அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து தொடரை சமன்செய்திருந்தது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடrரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டி செஸ்ட்ர் லீ ஸ்டீரிட்டில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து இங்கிலாந்து அணியை பாந்துவீச அழைத்தது.
அதன்படி களமிறங்கிய இந்திய மகளிர் அணிக்கு பிரதிகா ராவல் மற்றும் ஸ்மிருதி மந்தனா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பிரதிகா ராவல் 26 ரன்களிலும், மற்றொரு தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவும் 45 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த ஹர்லீன் தியோல் மற்றும் ஹர்மன்ப்ரீத் கவுர் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன், ஸ்கோரையும் உயர்த்தினர். இதில் ஹர்மன்ப்ரீத் கவுர் அரைசதம் கடந்த நிலையில், ஹர்லீன் தியோல் 45 ரன்களில் விக்கெட்டை இழந்து அரைசதத்தை தவறவிட்டார்.