
மகளிருக்கான அண்டர்19 உலகக்கோப்பை தொடர் தென் ஆப்பிரிக்காவில் இன்று தொடங்கியது. இதில் இன்று நடைபெற்ற போட்டியில் இந்திய யு19 மகளிர் அணி, தென் ஆப்பிரிக்க யு19 மகளிர் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானிதது.
அதன்படி களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீராங்கனைகள் ரேன்ஸ்பர்க் - சிமோன் லாரன்ஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் ரென்ஸ்பர்க் 23 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் சியோ முதல் பந்திலேயே ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார்.
இருப்பினும் மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை தொடர்ந்த லாரன்ஸ் அரைசதம் கடந்து அசத்தினார். பின் 61 ரன்களில் அவரும் விக்கெட்டை இழக்க, பின்ன வந்த கைலா ரெய்னேகே 11, மேடிசன் லேண்ட்ஸ்மேன் 32, மெஸொ 19, மிலென் ஸ்மித் 16 என பங்களிப்பு செய்ய 20 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 5 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்களைச் சேர்த்தது.