
Indian Skipper Rohit Sharma Tests Covid Positive, Isolated In Team Hotel (Image Source: Google)
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி வரும் ஜூலை 1ஆம் தேதி தொடங்க உள்ளது. இதற்கான பயிற்சி போட்டியில் இந்தியா மற்றும் கவுண்டி அணிகள் தீவிரமாக மோதி வருகிறது.
இந்நிலையில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு கரோனா உறுதியாகியுள்ளது. பயிற்சி போட்டியில் பங்கேற்றிருந்த ரோஹித் சர்மா, 3ஆவது நாளான நேற்று பேட்டிங் மற்றும் ஃபீல்டிங் செய்ய களமிறங்கவே இல்லை. இந்திய அணி 364/7 ரன்களுக்கு சென்ற போதும், ரோஹித் வரவில்லை.
போட்டி முடிந்த பிறகு ரோஹித் சர்மாவுக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்ட போது, அதில் பாசிட்டிவ் என முடிவு வந்துள்ளது. இதனையடுத்து அவர் குவாரண்டைன் செய்யப்பட்டுள்ளார். குறைந்தபட்சம் அடுத்த 5 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஜூலை 1 நடக்கவிருக்கும் டெஸ்ட் போட்டியையும் தவறவிடலாம்.