
மகளிருக்கான அண்டர்19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற போட்டியில் இந்திய மகளிர் அணி, ஐக்கிய அரபு அமீரக அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரக அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய இந்திய அணி தொடக்க வீராங்கனைகள் ஸ்வேதா செஹ்ராவத் - கேப்டன் ஷஃபாலி வர்மா இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தி அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். தொடர்ந்து அபாரமாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர்.
பின் ஷஃபாலி வர்மா 78 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ரிச்சா கோஷ் 29 பந்துகளில் 2 சிக்சர், 5 பவுண்டரிகள் என 49 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்து நூழிலையில் அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இருப்பினும் மற்றொரு தொடக்க வீராங்கனை ஸ்வேதா செஹ்ராவத் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 74 ரன்களைச் சேர்த்தார்.