Advertisement

ஐபிஎல் 2024: பஞ்சாப் கிங்ஸ் அணியில் மீண்டு இணைந்த சஞ்சய் பங்கார்!

இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்காருக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியில் புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan December 08, 2023 • 22:16 PM
ஐபிஎல் 2024: பஞ்சாப் கிங்ஸ் அணியில் மீண்டு இணைந்த சஞ்சய் பங்கார்!
ஐபிஎல் 2024: பஞ்சாப் கிங்ஸ் அணியில் மீண்டு இணைந்த சஞ்சய் பங்கார்! (Image Source: Google)
Advertisement

இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரான சஞ்சய் பங்கார் கடந்த 2014 ஆம் ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் அணியின் உதவி பயிற்சியாளராக இருந்துள்ளார். அந்த ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் இறுதிப்போட்டி வரை முன்னேறியது. அதைத் தொடர்ந்து, அடுத்த இரண்டு சீசன்களில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக சஞ்சய் பங்கார் செயல்பட்டார். 

அதன்பின் கடந்த 2021ஆம் ஆண்டு முதல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டுவந்தார். பின்னர் இந்தாண்டு அவரை ஆர்சிபி அணி பயிற்சியாளர் பதவியிலிருந்து சஞ்சய் பங்கார் நீக்கப்பட்டு, புதிய பயிற்சியாளர்களை நியமித்தது. 

Trending


இந்நிலையில் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் வரும் மார்ச் மாதம் தொடங்கவுள்ளது. முன்னதாக இத்தொடரில் பங்கேற்கு வீரர்களுக்கான  மினி ஏலம் வரும் டிசம்பர் 19ஆம் தேதி துபாயில் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகிறது. அதன் ஒருபகுதியாக பஞ்சாப் கிங்ஸ் அணியின் கிரிக்கெட் வளர்ச்சித் தலைவராக சஞ்சய் பங்கார் நியமிக்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இதுகுறித்து பேசிய அவர், “நம்மிடம் சிறந்த கிரிக்கெட் வீரர்கள் இருக்கிறார்கள். அதன் காரணமாகவே இந்த ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் அணியிலிருந்து குறைந்த அளவிலான வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். அடுத்த ஐபிஎல் சீசனுக்கு பஞ்சாப் அணிக்கு  சிறந்த ஆதரவை அளித்து அணியை வலுவாக்க வேண்டும் என்பதே தற்போது இருக்கும் சவால்” என்று தெரிவித்துள்ளார். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement