
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சுனில் நரைன் 84 ரன்களையும், இளம் வீரர் அங்கிரிஷ் ரகுவன்ஷி 54 ரன்களையும் சேர்த்தனர்.
இதையடுத்து இமாலய இலக்கி நோக்கி விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் டேவிட் வார்னர், பிரிதிவி ஷா, மிட்செல் மார்ஷ், அபிஷேக் போரல் ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் அதிரடியாக விளையாடிய ரிஷப் பந்த், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோர் அரைசதம் கடந்த போது அந்த அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 166 ரன்களை மட்டுமே எடுத்ததுடன் 106 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்நிலையில் இப்போட்டியின் வெற்றிக்கு பிறகு பேசிய கேகேஆர் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், “நேர்மையாக சொல்ல வேண்டும் எனில் இப்போட்டியில் நாங்கள் முதலில் 210 அல்லது 220 ரன்கள் எடுப்போம் என்று மட்டுமே நினைத்தோம். ஆனால் 270 ரன்கள் எடுப்போம் என்று நாங்கள் நினைத்துக்கூட பார்க்கவில்லை. இப்போட்டிக்கு முன்னதாக சுனில் நரைனை தொடக்க வீரராக களமிறக்கி அதிரடியாக விளையாடுவதே மட்டுமே அவரது வேலை.