
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 52ஆவது லீக் போட்டியில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து எம் எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அணி பலப்பரீட்சை நடத்தின.
பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இன்றைய போட்டிக்கான சிஎஸ்கே அணியில் எந்த மாற்றங்களும் இல்லாத நிலையில், ஆர்சிபி அணியில் ஹேசில்வுட்டிற்கு பதிலாக லுங்கி இங்கிடி லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார். இதனையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு ஜேக்கப் பெத்தெல் - விராட் கோலி இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடியதுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர்.
இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய ஜேக்கப் பெத்தல் 28 பந்துகளில் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்து அசத்தினார். இதன்மூலம் இருவரின் பார்ட்னர்ஷிப்பும் 97 ரன்களை எட்டிய நிலையில் 8 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 55 ரன்களைச் சேர்த்திருந்த ஜேக்கப் பெத்தெல் தனது விக்கெட்டை இழந்தார். அதேசமயம் மறுமுனையில் அபாரமான அட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி 29 பந்துகளில் அரைசதத்தை பூர்த்தி செய்தார். தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த விரட் கோலி இப்போட்டியில் 5 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் என 62 ரன்களைச் சேர்த்த கையோடு தனது விக்கெட்டை இழந்தார்.