
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இறுதிக்கட்டதை எட்டியுள்ளது. இதில் நடைபெற்று முடிந்துள்ள 4 போட்டிகளின் முடிவில் இந்திய அணி மூன்று போட்டிகளிலும், இங்கிலாந்து அணி ஒரு போட்டியிலும் என வெற்றிபெற்றுள்ளன. இதன்மூலம் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றி அசத்தியுள்ளது.
இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மார்ச் 7ஆம் தேதி தர்மசாலாவில் உள்ள ஹிமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இந்திய அணி ஏற்கெனவே டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ள நிலையில் கட்சி போட்டியிலும் வெற்றிபெறும் உத்வேகத்தில் உள்ளது. அதேபோல் இங்கிலாந்து அணியும் தொடரை ஆறுதல் வெற்றியைத் தேட போராடும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
முன்னதாக தனிப்பட்ட காரணங்களால் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி இத்தொடரிலிருந்து விலகினார். இதனால் விராட் கோலியின் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். இந்நிலையில், விராட் கோலி இத்தொடரில் விளையாடாததற்கு இங்கிலாந்து ரசிகர்கள் நன்றி தெரிவிப்பார்கள் என்று அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார்.