
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணியானது 3-0 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றிய நிலையில், இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இலங்கை - இந்திய அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை கொழும்புவில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றன.
அதேசமயம் நாளைய போட்டிக்கான இந்திய அணியில் எந்தெந்த வீரர்கள் பிளேயிங் லெவனில் இடம்பிடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. ஏனெனில் ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ரிஷப் பந்த், வாஷிங்டன் சுந்தர் போன்ற வீரர்களுடன் ஷிவம் தூபே, ரியான் பாராக் மற்றும் ஹர்ஷித் ரானா போன்ற அறிமுக வீரர்களும் இந்திய ஒருநாள் அணியில் இடம்பிடித்துள்ளதன் காரணமாக யார் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற கேள்வி எழுந்து வருகிறது.
அதிலும் குறிப்பாக அணியின் விக்கெட் கீப்பருக்கான தேர்வில் கேஎல் ராகுல் மற்றும் ரிஷப் பந்த் ஆகியோர் இருப்பதால் இவர்களில் யார் இடம்பிடிப்பார்கள் என்ற கேள்வி அதிகரித்துள்ளது. இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மாவிடம், நாளைய போட்டிக்கான் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் யார் இடம்பிடிப்பார் என்ற கேள்வி எழுப்பப்பட்டது.