-mdl.jpg)
இந்திய கிரிக்கெட்டில் தற்போது மிக முக்கிய மூத்த வீரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ரன் மெஷின் விராட் கோலி இருவரும் இருந்து வருகிறார்கள். இதில் விராட் கோலியை விட ரோஹித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானதில் சீனியர். ஆனால் இந்திய அணியின் நட்சத்திர வீரராக முதலில் உருவெடுத்தவர் விராட் கோலி.
ரோஹித் சர்மாவின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை ஏற்றத்தாழ்வு நிறைந்ததாகவே 2013 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை வரை இருந்து வந்தது. அந்த குறிப்பிட்ட தொடரில் மகேந்திர சிங் தோனி அவரை தொடக்க வீரராக கொண்டு வந்தார். அங்கிருந்துதான் ரோஹித் சர்மாவின் கிரிக்கெட் வாழ்க்கை மாறியது. ஆரம்ப காலக்கட்டத்தில் மூத்த வீரர்கள் நிரம்பி இருந்த அணியில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவே நெருங்கிய நண்பர்களாக இருந்தார்கள்.
பிறகு இவர்கள் இருவரும் வளர வளர இவர்களது நட்பை வெளியில்பார்க்க முடியவில்லை. மேலும் கேப்டன்சி விவகாரத்தில் விரும்பத்தகாத சில நிகழ்வுகள் நடைபெற்று விராட் கோலி விலகிக் கொண்டார். அவருடைய இடத்தில் ரோஹித் சர்மா கொண்டுவரப்பட்டார். இது இவர்களுக்கு உள்ளான நட்பு குறித்து வெளியில் நிறைய கேள்விகளை சந்தேகங்களை எழுப்பியது.