
இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே ஹைத்ராபாத்தில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரின் ஆரம்பத்திலேயே 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இதையடுத்து இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது போட்டி வரும் பிப்ரவரி 2ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த முன்னணி வீரர்களான ஜடேஜா மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளனர். இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது ரவீந்திர ஜடேஜா காயம் கடைந்தார்.
இதனால் அவர் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அதேசமயம் மற்றொரு இந்திய வீரரான கேஎல் ராகுலும் முதல் போட்டியில் காயமடைந்துள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. இதனால் அவரும் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது போட்டியிலிருந்து விலகியுள்ளார். மேலும், இருவரின் காயத்தின் நிலை குறித்து பிசிசிஐ மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.