-mdl.jpg)
தென் ஆப்பிரிக்க அணி தற்சமயம் பாகிஸ்தான் அணிக்கு எதிராக மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்துள்ள டி20 தொடரை தென் ஆப்பிரிக்க அணி 2-0 என்ற கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி வென்றுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நடந்து வருகிறது.
இதில் நடந்து முடிந்துள்ள முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ள நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டவது ஒருநாள் போட்டி நாளை கேப்டவுனில் நடைபெறவுள்ளது. இதில் பாகிஸ்தான் வெற்றி பெறும் பட்சத்தில் தொடரை கைப்பற்றும், அதேசமயம் தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெறும் பட்சத்தில் தொடரை சமன்செய்யும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
மேலும் இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகியும் வருகின்றனர். அதேசமயம் பணிச்சுமை கரணமாக முதல் ஒருநாள் போட்டியில் விளையாடாத கேப்டன் டெம்பா பவுமா உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் மீண்டும் அணிக்கு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக தென் ஆப்பிரிக்க அணியானது மிகப்பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.