
இங்கிலாந்து அணிக்கு எதிரான 5ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி திடீரென பின் தங்கியுள்ளது. முதல் இன்னிங்ஸில் 132 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி 2ஆவது இன்னிங்ஸில் 378 ரன்களை இலக்காக நிர்ணயித்தும் பந்துவீச்சில் சொதப்பிவிட்டது.
இங்கிலாந்து அணியில் அலெக்ஸ் லீஸ், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோ என வீரர்கள் அரைசதங்களை விளாசியதால் 4ஆம் நாள் ஆட்டத்தின் முடிவு வரை இங்கிலாந்து அணி 259 - 3 என வலுவான நிலையில் உள்ளது. ஓவருக்கு 4.45 ரன்களை கசியவிட்டு இந்திய அணி தோல்விக்கு மிக அருகில் சென்றுக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் இந்தியாவின் சொதப்பலுக்கு பும்ரா தான் காரணம் என முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் கூறியுள்ளார். அதில், “பும்ராவின் வியூகங்கள் முற்றிலும் மோசமாக இருந்தது. ரிவர்ஸ் ஸ்விங் பந்துகளுக்கு அங்கு பலனே இல்லை. ஆனால் அதையே வீசிவைத்ததால், பேட்ஸ்மேன்களால் சுலபமாக கணிக்க முடியும்படி செய்துவிட்டார்.