Advertisement

இந்திய ஒருநாள் அணியின் கேப்டான் யார்? போட்டியில் கேல் ராகுல் - ஷுப்மன் கில்!

இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய அணியின் கேப்டனாக கேஎல் ராகுல் அல்லது ஷுப்மன் கில் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement
இந்திய ஒருநாள் அணியின் கேப்டான் யார்? போட்டியில் கேல் ராகுல் - ஷுப்மன் கில்!
இந்திய ஒருநாள் அணியின் கேப்டான் யார்? போட்டியில் கேல் ராகுல் - ஷுப்மன் கில்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jul 16, 2024 • 03:05 PM

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியானது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இதில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது ஜூலை 27ஆம் தேதி முதல் ஜீலை 30ஆம் தேதி வரையிலும், ஒருநாள் தொடரானது ஆகஸ்ட் 02ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 07ஆம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளன. மேற்கொண்டு இத்தொடருக்கான இந்திய அணியும் இன்றைய தினம் அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Bharathi Kannan
By Bharathi Kannan
July 16, 2024 • 03:05 PM

மேலும் இத்தொடரில் இருந்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீர் பதவியேற்கவுள்ளார். மேலும் இத்தொடரில் இருந்த இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா உள்ளிட்ட வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இதன் காரணமாக இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய அணியின் கேப்டனாக கேஎல் ராகுலும், டி20 தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியானது. 

Trending

இந்நிலையில் தான் தனிப்பட்ட காரணங்களுக்காக இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து ஹர்திக் பாண்டியா விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அணியின் முக்கிய ஆல் ரவுண்டராக திகழும் ஹர்திக் பாண்டியா ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளது அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என கணிக்கப்படுகிறது. மேற்கொண்டு ஒருநாள் தொடருக்கான அணியின் கேப்டனாக யார் நியமிக்கப்படுவார் என்ற கேள்விகளும் அதிகரித்து வருகின்றன. இதில் கேஎல் ராகுல் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. 

அதேசமயம் தற்போது இந்திய அணியின் எதிர்காலம் என கருதப்படும் ஷுப்மன் கில் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது. சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றிய இந்திய அணியை ஷுப்மன் கில் வழிநடத்தியதன் காரணமாக அவரது பெயரும் தற்சமயம் கேப்டன்களுக்கான தேர்வில் இடம்பிடித்துள்ளது. ஆனாலும் கேஎல் ராகுலுக்கு ஏற்கெனவே இந்திய அணியை வழிநடத்திய அனுபவம் உள்ளது. 

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

அதன்படி கடந்த ஆண்டு டிசம்பரில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா தனது கடைசி ஒருநாள் போட்டியை விளையாடியது, அதில் கேஎல் ராகுல் கேப்டனாக இருந்தார். மேலும் அவர் இதுவரை, ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணியின் கேப்டனாக 12 போட்டிகளில் விளையாடி, அதில் 8 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். ஒரு டி20 போட்டி மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு ராகுல் கேப்டனாக இருந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்தகைய சூழ்நிலையில், ரோஹித் சர்மா இல்லாத நிலையில் அவர் அணியின் தலைமைப் பொறுப்பை ஏற்கவே அதிகபடியான வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement