Advertisement

அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வை அறிவித்தார் மனோஜ் திவாரி!

பீகார் அணிக்கெதிரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியுடன் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக பெங்கால் அணியின் கேப்டன் மனோஜ் திவாரி அறிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan February 17, 2024 • 13:40 PM
அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வை அறிவித்தார் மனோஜ் திவாரி!
அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வை அறிவித்தார் மனோஜ் திவாரி! (Image Source: Google)
Advertisement

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரராக அறியப்படுபவர் மனோஜ் திவரி.  இவர் 2008 முதல் 2015 ஆம் ஆண்டு வரை இந்திய அணிக்காக 12 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் ஒரு சதம், ஒரு அரைசதம் என 302 ரன்களை எடுத்துள்ளார்.  அதன்பின் அரசியலில் நுழைந்ததுடன், மம்தா பானர்ஜின் அமைச்சரவையில் விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அமைச்சராகவும் ஆனார்.

அரசியலில் இருந்தபோதிலும் கிரிக்கெட் போட்டிகளில் கவனம் செலுத்தி விளையாடி வந்தார். 2022-2023 ஆம் ஆண்டுக்கான உள்ளூர் போட்டிகளில் மேற்கு வங்கத்துக்காக விளையாடி அந்த அணியை இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்றார். அதேபோல் இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ்(டெல்லி கேப்பிட்டல்ஸ்) மற்றும் ரைஸிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் போன்ற அணிகளுக்காக விளையாடியுள்ளார்.

Trending


கடந்த 2012 ஆம் ஆண்டு ஐபிஎல் கோப்பையை வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் மனோஜ் திவாரி இடம் பெற்று கடைசி ஓவரில் வெற்றிக்குத் தேவையான ரன்களை அடித்தது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் தொடரில் இதுவரை 98 போட்டிகளில் விளையாடியுள்ள மனோஜ் திவாரி 7 அரைசதங்களுடன், 1,695 ரன்களையும் சேர்த்துள்ளார். இந்நிலையில் தான் தொடர்ச்சியான காயங்களை சந்தித்த அவர், இந்திய அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டார். 

இருப்பினும் அதன்பின் பெங்கால் கிரிக்கெட் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் அவர், நடப்பாண்டு ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரிலும் அணியை வழிநடத்தி வருகிறார். இந்நிலையில், நடப்பாண்டு ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் பீகார் அணிக்கெதிரான போட்டியுடன் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக மனோஜ் திவாரி அறிவித்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில், “அனைவருக்கும் வணக்கம், எனவே... என்னுடைய கடைசி போட்டிக்கான நேரம் இது. இந்த 22 யார்ட்டை நோக்கி நீண்ட நடைப்பயணத்தில் கடைசியாக ஒருமுறை நடக்கவுள்ளேன். இத்தனை ஆண்டுகளாக என்னை உற்சாகப்படுத்தியதற்கும் நேசித்ததற்கும் நன்றி. பெங்கால் அணியை உற்சாகப்படுத்த நீங்கள் அனைவரும் நாளையும் மறுநாளும் எனக்குப் பிடித்த ஈடன் கார்டனுக்கு வந்தால் அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். கிரிக்கெட்டின் விசுவாசமான ஊழியர், உங்கள் மனோஜ் திவாரி” என்று பதிவுசெய்துள்ளார்.

இந்நிலையில் தனது கடைசி ரஞ்சி கோப்பை போட்டியில் விளையாடி வரும் மனோஜ் திவாரி பீகார் அணிக்கெதிரான போட்டியின் முதல் இன்னிங்ஸில் 4 பவுண்டரிகளுடன் 30 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement