
ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நாளை அஹ்மதாபாத் நகரில் நடைபெறுகிறது. இதில் லீக் மற்றும் நாக் அவுட் சுற்றில் வெற்றி வாகை சூடிய இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் கோப்பையை வென்று சரித்திரம் படைப்பதற்காக பலப்பரீட்சை நடத்துவதற்கு தயாராக இருக்கின்றன.
குறிப்பாக 2023 சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு தோல்வியை பரிசளித்ததை போல இம்முறையும் வென்று தங்களுடைய 6ஆவது கோப்பையை முத்தமிட ஆஸ்திரேலியா தயாராகியுள்ளது. மறுபுறம் சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 10 வெற்றிகள் பெற்று மிரட்டலான ஃபார்மில் இருக்கும் இந்தியா 2003 உலகக்கோப்பை தோல்விக்கு ஆஸ்திரேலியாவை துவம்சம் செய்து 2011 போல சாம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்புடன் களமிறங்க உள்ளது.
இந்நிலையில் தங்களுடைய தொடர்ச்சியான வெற்றிகளில் பயிற்சியாளர் மற்றும் ஜாம்பவான் ராகுல் டிராவிட் முக்கிய பங்காற்றி வருவதாக கேப்டன் ரோஹித் சர்மா பாராட்டு தெரிவித்துள்ளார். எனவே இந்த உலகக் கோப்பையை அவருக்காகவும் சேர்த்து வெல்வோம் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்