Advertisement

நாங்கள் இன்னும் எங்கள் சிறந்த ஆட்டத்தை ஆடவில்லை - மிக்கி ஆர்த்தர்!

இந்த தோல்விக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த பாகிஸ்தான் அணியின் இயக்குனரும், முன்னாள் பயிற்சியாளருமான மிக்கி ஆர்த்தர், பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு என்ன காரணம் என்பதை கூறினார்.

Bharathi Kannan
By Bharathi Kannan October 28, 2023 • 12:20 PM
நாங்கள் இன்னும் எங்கள் சிறந்த ஆட்டத்தை ஆடவில்லை - மிக்கி ஆர்த்தர்!
நாங்கள் இன்னும் எங்கள் சிறந்த ஆட்டத்தை ஆடவில்லை - மிக்கி ஆர்த்தர்! (Image Source: Google)
Advertisement

உலகக்கோப்பை லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியிடம் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது பாகிஸ்தான் அணி. இந்த தோல்விக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த பாகிஸ்தான் அணியின் இயக்குனரும், முன்னாள் பயிற்சியாளருமான மிக்கி ஆர்த்தர், பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு என்ன காரணம் என்பதை கூறினார்.

இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து 46.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 270 ரன்கள் எடுத்தது. ஒருவேளை பாகிஸ்தான் முழுவதுமாக 50 ஓவர்கள் பேட்டிங் செய்து இருந்தால் நிச்சயம் 300 ரன்களை தாண்டி ரன் குவித்திருக்க முடியும். அதன் பின் தென் ஆப்பிரிக்கா அணி சேஸிங் செய்த போது அந்த அணியை 235 ரன்களுக்கு 5 விக்கெட் என்ற நிலையில் இருந்து விக்கெட்களை வரிசையாக வீழ்த்தி கடைசி 1 விக்கெட்டுடன் வெற்றிக்கு போராட வைத்தது பாகிஸ்தான் அணி. 

Trending


ஆனால், பாகிஸ்தான் அணியால் வெற்றி பெற முடியவில்லை. தென் ஆப்பிரிக்கா 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த தோல்வி குறித்து பேசிய மிக்கி ஆர்த்தர், "மிக நேர்மையாக சொல்ல வேண்டும் என்றால் நாங்கள் இன்னும் எங்கள் சிறந்த ஆட்டத்தை ஆடவில்லை. நங்கள் ஒரு அணியாக நன்றாக பேட்டிங் ஆடவில்லை. இந்த பிட்ச்சில் 300 ரன்கள் அடித்து இருந்தால் சரியாக இருந்திருக்கும். ஆனால், நங்கள் போதிய ரன்களை அடிக்கவில்லை.

குறைவான ரன்கள் அடித்த நிலையில், அதற்கு ஏற்ற பந்துவீச்சை நாங்கள் வீசவில்லை. ஆனால், இந்த இரவு தான் இந்த தொடரிலேயே நாங்கள் சிறப்பான பந்துவீச்சை செயல்படுத்தி இருக்கிறோம். நாங்கள் நன்றாக பந்து வீசிய போதும், அதற்கு ஏற்ற ரன்களை நாங்கள் எடுக்கவில்லை. நாங்கள் இன்னும் நிறைய இடங்களில் அணியை முன்னேற்ற வேண்டும். 

நாங்கள் மீதமுள்ள மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்த தொடரை முடிக்க வேண்டும் என நினைக்கிறோம். தினமும் நாங்கள் அதற்காக முயற்சி செய்வோம். அதை செய்து காட்டுவோம்" என்று கூறியுள்ளார்.  இந்நிலைஉஇல் பாகிஸ்தான் அணி மீதமுள்ள மூன்று போட்டிகளிலும் வென்றாலும் கூட அரை இறுதி வாய்ப்பு கிடைக்குமா? என்பது சந்தேகம் தான்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement