Advertisement
Advertisement
Advertisement

பாகிஸ்தான் கேப்டனாக முகமது ரிஸ்வானை நியமிக்க ஆர்வம் காட்டும் பிசிபி?

பாகிஸ்தான் அணியின் தொடர் தோல்விகள் காரணமாக அந்த அணியின் கேப்டன்களை மாற்றும் முயற்சியில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement
பாகிஸ்தான் கேப்டனாக முகமது ரிஸ்வானை நியமிக்க ஆர்வம் காட்டும் பிசிபி?
பாகிஸ்தான் கேப்டனாக முகமது ரிஸ்வானை நியமிக்க ஆர்வம் காட்டும் பிசிபி? (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Sep 07, 2024 • 01:58 PM

வங்கதேச அணி சமீபத்தில் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இத்தொடர் முடிவில் வங்கதேச அணியானது இரண்டு போட்டிகளிலும் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 2-0 என்ற கணக்கில் பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தியதுடன், தொடரை முழுமையாக கைப்பற்றியும் சாதனைகளை குவித்துள்ளது. அதேசமயம் பாகிஸ்தான் அணியின் செயல்பாடுகள் குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. 

Bharathi Kannan
By Bharathi Kannan
September 07, 2024 • 01:58 PM

ஏனேனில் வங்கதேசத்திற்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் ஒரு அவமானகரமான தோல்வியை 2-0 என்ற கணக்கில் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இதன் காரணமாக அந்த அணியின் கேப்டன், தேர்வுகு குழு, நட்சத்திர வீரர்கள் என அனைவர் மீதும் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இத்தோல்வியின் காரணமாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமானது சில மாற்றங்களை செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Trending

வெளியான தகவலின் அடிப்படையில். ஷான் மசூத் மற்றும் பாபர் அசாம் ஆகியோர் கேப்டன் பதவியில் இருந்து விலக உள்ளதாகவும், இதன் காரணமாக மூன்று வடிவிலான பாகிஸ்தான் அணியின் புதிய கேப்டனாக அதிரடி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வான் நியமிக்கப்படவுள்ளார் என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் கேப்டனாக ஷன் மசூத்தின் செயல்பாடுகள் அவ்வளவாக எடுபடவில்லை. 

ஏனெனில் ஷான் மசூத்தின் தலைமையில், பாகிஸ்தான் அணி 2023 ஆம் ஆண்டு முதல் இதுவரை மொத்தம் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. இந்த ஐந்து போட்டிகளில் அந்த அணியானது ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை. இதன் காரணமாகவே அவர் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் தான் பாபர் ஆசாமின் கேப்டன்சியும் கேள்விக்குறியாகியுள்ளது. 

ஏனெனில் பாபர் ஆசாம் தலைமையில், கடந்தாண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை, இந்தாண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடர்களில் பாகிஸ்தான் அணியானது படுமோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியாதுடன், லீக் சுற்றுடனே தொடரில் இருந்தும் வெளியேறியது. இதன் காரணமாக பாகிஸ்தான் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டனாக முகமது ரிஸ்வான் நியமிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.

Also Read: Funding To Save Test Cricket

இதற்கு முன்னதாக பாகிஸ்தான் அணியின் கேப்டனாக முகமது ரிஸ்வான் 2 டெஸ்ட் போட்டிகளில் அணியை வழிநடத்தியுள்ளார். ஆனால் அந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் பாகிஸ்தான் அணியானது தோல்வியை மட்டுமே சந்தித்ததும் குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் அணிக்காக கடந்த 2015ஆம் ஆண்டு அறிமுகமான முகமது ரிஸ்வான் இதுநாள் வரை, 32 டெஸ்ட், 74 ஒருநாள், 102 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 7 சதம், 51 அரைசதங்களுடன் ஏழாயிரத்திற்கும் அதிகமான ரன்களை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement