
நட்சத்திர கிரிக்கெட் வீரர் முகமது ஷமி கடந்த 10 வருடங்களாக சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியின் முதன்மை பவுலராக செயல்பட்டு வருகிறார். குறிப்பாக 2015 உலகக் கோப்பைக்கு பின் அனுபவத்தால் முன்னேறிய அவர் 2019 உலகக் கோப்பையில் ஹாட்ரிக் விக்கெட்களை எடுத்து அசத்தினார். அதை விட 2023 உலகக் கோப்பையில் முதல் 4 போட்டிகளில் விளையாடாத அவர் காயமடைந்த பாண்டியாவுக்கு பதிலாக வாய்ப்பற்றார்.
அந்த வாய்ப்பை பொன்னாக மாற்றிய அவர் மொத்தம் 24 விக்கெட்டுகள் எடுத்து எதிரணிகளை தெறிக்க விட்டு இந்தியா இறுதிப்போட்டியில் செல்வதற்கு முக்கிய பங்காற்றினார். குறிப்பாக அரையிறுதியில் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி நியூசிலாந்தை முதல் முறையாக தோற்கடிக்க உதவிய அவர் ஐசிசி உலகக் கோப்பை வரலாற்றின் நாக் அவுட் போட்டியில் 6 விக்கெட்களை எடுத்த முதல் பவுலர் என்ற மாபெரும் சரித்திரம் படைத்தார்.
மேலும் மொத்தமாக 24 விக்கெட்டுகள் எடுத்த அவர் உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு தொடரில் அதிக விக்கெட்டுகளை எடுத்த இந்திய வீரர் என்ற மாபெரும் சாதனையும் படைத்தார். இருப்பினும் நடைபெற்று முடிந்த தென்னாப்பிரிக்க தொடரில் காயத்தால் அவர் காயத்தால் விலகியது முதல் போட்டியில் இந்தியா தோல்வியை சந்திக்க முக்கிய காரணமானது.