
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டிஸில் நடைபெற்று முடிந்த ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது. ஆனால் அதேசமயம் இந்திய அணி மீது பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்ஸாமாம் உல் ஹக் பந்தை சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டை முன்வைத்தது சர்வதேச கிரிக்கெட்டில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
அதன்படி இந்திய அணி சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலிய அணியை 24 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியதுடன், அந்த அணியை தொடரிலிருந்தும் வெளியேற்றியது. அந்த போட்டியில் இந்திய அணி வீரர்கள் பந்தை சேதப்படுத்தியுள்ளதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் இன்ஸாமாம் உல் ஹக் குற்றச்சாட்டை முன்வைத்தது பெரும் பரபரப்பை கிளப்பினார்.
ஆனால் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா உள்பட பல்வேறு தரப்பினரும் இன்ஸாமாம் உல் ஹக்கின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்தனர். இந்நிலையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியும் தனது கருத்தை தெரிவித்துள்ளது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதன்படி இதுகுறித்து பேசிய முகமது ஷமி, “கடந்த 2023 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையின் போது பந்தில் நான் பந்தை சேதப்படுத்தியதாக இன்ஸாமாம் உல் ஹக் குற்றம் சாட்டியிருந்தார்.