Advertisement

சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் விளையாடுவதில் வருத்தம் இல்லை - ராகுல் டிராவிட்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் விளையாடுவதில் வருத்தம் இல்லை என இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் திராவிட் தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan March 08, 2023 • 11:43 AM
Need to be realistic about batting in these challenging conditions says Rahul Dravid!
Need to be realistic about batting in these challenging conditions says Rahul Dravid! (Image Source: Google)
Advertisement

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது. இந்த தொடரில் இந்தூரில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் போட்டிக்கான ஆடுகளம் மோசமானது என ஐசிசி ரெஃப்ரீ கிறிஸ் பிராடு அறிக்கை அளித்தார். மேலும் 3 டெஸ்ட் போட்டிகளுமே 3 நாட்களுக்குள் முடிவடைந்துள்ளதால் ஆடுகளம் தொடர்பான கேள்விகள் தொடர்ச்சியாக எழுந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் திராவிட் கூறுகையில், “இந்த விவகாரத்துக்குள் நான் அதிகம் செல்லமாட்டேன். போட்டி ரெஃப்ரீக்கு அவருடைய கருத்தைகூற உரிமை உள்ளது. அவருடைய கருத்தை நான் ஏற்றுக்கொள்கிறேனா? அல்லது இல்லையா? என்பது விஷயம் இல்லை. நான் என்ன நினைக்கிறேன் என்பதும் முக்கியம் இல்லை. சில நேரங்களில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் சிக்கலில் இருப்பதால், முடிவுகள் கிடைக்கும் ஆடுகளங்களில் விளையாட முனைப்பு காட்ட வேண்டியது உள்ளது.

Trending


நாங்கள் வெளிநாடுகளுக்கு செல்லும் போது சில சவாலான ஆடுகளங்களில் விளையாடி உள்ளோம். 2022ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் விளையாடினோம். அங்கு சுழற்பந்து வீச்சாளர்கள் ஆட்டத்தில் இருந்து முற்றிலும் வெளியேற்றப்பட்டனர். முடிவுகளை அடையக்கூடிய ஆடுகளங்களையே அனைவரும் உருவாக்க விரும்புகிறார்கள். அங்கு பந்துகள் மட்டையின் மேல் பகுதிக்கு கடந்து செல்லும் வகையில் ஆடுகளங்கள் தயார் செய்வார்கள். இது அவசியமானதும், விளையாட்டின் ஒரு பகுதியும் ஆகும்.

இந்த சவாலான ஆடுகளங்களில் ஒரு நல்ல செயல்திறன் என்ன என்பதில் நீங்கள் யதார்த்தமாக இருக்க வேண்டும், இங்கு மட்டுமல்ல, கடந்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளாக நீங்கள் பார்த்தால், பொதுவாக எல்லா இடங்களிலும் ஆடுகளங்கள் சவாலாகவே உள்ளன. இதுபோன்ற ஆடுகளங்களில் ஒரு சிறந்த செயல்திறன் விளையாட்டை மாற்றும். நாக்பூரில் ரோஹித் சர்மா விளையாடியதை பார்த்தால் இது தெரியும்.

இதுபோன்ற ஆடுகளங்களில் 50, 60 அல்லது 70 ரன்கள் கூட சிறப்பானதாக இருக்கும். வீரர்களுடன் தனிப்பட்ட முறையில் மேற்கொண்ட உரையாடல்களை நான் கூற விரும்பவில்லை. அனைவரும் வெற்றி பெறவும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறவும் விரும்புகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement