Advertisement

பும்ரா எந்தெந்த போட்டிகளில் விளையாடுவார் என்று முடிவு செய்யவில்லை - கௌதம் கம்பீர்

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ஜஸ்பிரித் பும்ரா எந்த நான்கு போட்டிகளில் விளையாடுவார் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை என்று தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் கூறியுள்ளார்.

Advertisement
பும்ரா எந்தெந்த போட்டிகளில் விளையாடுவார் என்று முடிவு செய்யவில்லை - கௌதம் கம்பீர்
பும்ரா எந்தெந்த போட்டிகளில் விளையாடுவார் என்று முடிவு செய்யவில்லை - கௌதம் கம்பீர் (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jun 06, 2025 • 01:31 PM

இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் ஜஸ்பிரித் பும்ரா அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடுவாரா இல்லையா என்பது அணியின் தேவைகள் மற்றும் சூழ்நிலையைப் பார்த்து முடிவு செய்யப்படும் என்றும், கருண் நாயருக்கு நீண்ட வாய்ப்பு வழங்கப்படும் என்றும் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். 

Bharathi Kannan
By Bharathi Kannan
June 06, 2025 • 01:31 PM

எதிவரும் ஜூன் 20 ஆம் தேதி இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்கவுள்ளது. இங்கிலாந்து செல்வதற்கு முன்னதாக மும்பையில் உள்ள பிசிசிஐ தலைமை அலுவலகத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் இருவரும் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது தலைமை பயிற்சியாளரிடம் பும்ரா மற்றும் கருண் நாயர் ஆகியோர் அனைத்து போட்டிகளிலும் விளையாடுவார்களா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கௌம்பீர், “இந்த டெஸ்ட் தொடரில் ஜஸ்பிரீத் பும்ரா 4 போட்டிகளில் மட்டும் விளையாடுவார். ஆனால் இதுகுறித்து இன்னும் நாங்கள் எதனையும் முடிவு செய்யவில்லை. ஏனெனில் பும்ரா போன்ற ஒரு வீரரை மாற்றுவது கடினம், ஆனால் எங்களிடம் தரமான விருப்பங்கள் உள்ளன" என்று கம்பீர் கூறினார்.

அதேசமயம் கருண் நாயர் குறித்து பேசிய அவர், “கருண் நாயர் உள்ளூர் கிரிக்கெட்டிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நல்ல ஃபார்மில் இருக்கிறார். மேலும் அவர் இங்கிலாந்து லையன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில்  இந்தியா 'ஏ' அணிக்காக இரட்டை சதம் அடித்துள்ளார். இந்த வீரர்கள் நல்ல ஃபார்மில் இருப்பதும், ரன்கள் எடுப்பதும் எங்களுக்கு எப்போதும் நல்லது. எனவே அவரது அனுபவம் நிச்சயமாக கைகொடுக்கும். அவர் சிறப்பாக செயல்பட முடியும் என்று நம்புகிறேன்.

மேலும் இத்தொடரில் அவருக்கு தொடர்ச்சியான வாய்ப்புகள் வழங்கவுள்ளோம். மாறாக ஒன்று அல்லது இரண்டு டெஸ்ட் போட்டிகளை வைத்து ஒருவரை மதிப்பிட மாட்டோம்” என்று கூறிவுள்ளார். மேலும் ஸ்ரேயாஸ் ஐயர் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள கம்பீர், இந்த சுற்றுப்பயணத்தின் போது மாற்று வீரராக ஸ்ரேயாஸ் ஐயர் அணியில் இடம் பெறுவதற்கான சாத்தியக்கூறு அதிகம் உள்ளது என்று கூறிவுள்ளார்.

Also Read: LIVE Cricket Score

இந்திய டெஸ்ட் அணி: ஷுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பந்த் (துணைக்கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்ஷன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், நிதிஷ் குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement