
ODI World Cup: Ashwin asks fans to be patient with Virat Kohli and Rohit Sharma (Image Source: Google)
இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் முன்னாள் கேப்டன் விராட் கோலி மீது சமீப காலமாக பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இதில் விராட் கோலி இந்த ஆண்டில் அடுத்தடுத்து இரண்டு சதங்களை அடித்து அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
அதேபோல் ரோஹித் சர்மாவும் சதமடித்தார். இந்நிலையில் இவர்கள் மீது வைக்கப்பட்ட விமர்சனம் குறித்து இந்திய வீரர் ரவீச்சந்திரன் அஸ்வின் கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது யூடியூப் சேனலில் பேசி உள்ள அஸ்வின் இந்திய அணி 2013 ஆம் ஆண்டுக்கு பிறகு ஐசிசி கோப்பையை வாங்கவில்லை என்று ஊடகங்களால் தேவையில்லாத அழுத்தத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளார். கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரே தன்னுடைய ஆறாவது உலகக் கோப்பையில் தான் சாம்பியன் பட்டத்தை வென்றதாக அவர் தெரிவித்துள்ளார்.