Advertisement
Advertisement
Advertisement

இந்த போட்டி மிகவும் சீக்கிரமாக முடிவடைந்து விட்டது - ஸ்டீவ் ஸ்மித்!

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெற்றிபெற்றதன் காரணங்களை ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பகிர்ந்துள்ளார். 

Bharathi Kannan
By Bharathi Kannan March 19, 2023 • 21:52 PM
‘Only 37 overs, you don’t see that too often’: Steve Smith
‘Only 37 overs, you don’t see that too often’: Steve Smith (Image Source: Google)
Advertisement

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி 37 ஓவர்களில் முடிந்தது, இந்திய ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. காரணம் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 117 ரன்களில் ஆட்டம் இழக்க அதனை ஆஸ்திரேலிய அணி விக்கெட் எதுவும் இழக்காமல் 11வது ஓவரிலே எட்டி அசத்தினர்.இதன் மூலம் அதிக பந்துகள் மிச்சம் இருந்த நிலையில் இந்திய அணி தோல்வியை தழுவியது இதுவே முதல் முறையாகும்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித், “ இந்த போட்டி மிகவும் சீக்கிரமாக முடிவடைந்து விட்டது. வெறும் 37 ஓவர் தான் போட்டி நடைபெற்றது. இதுபோன்ற சம்பவங்களை நாம் அதிக முறையில் பார்க்க முடியாது. இன்றைய ஆட்டத்தில் ஆடுகளம் எப்படி செயல்படும் என்று எங்களால் கணிக்க முடியவில்லை.

Trending


அதனால் எந்த இலக்கை துரத்த போகிறோம் என்று கொஞ்சம் கூட நாங்கள் யோசிக்கவில்லை. போட்டிக்கு சென்று எங்களுடைய திறமையை வெளிப்படுத்துவதில் நாங்கள் குறியாக இருந்தோம். இந்திய அணி வீரர்களை நாங்கள் நெருக்கடிக்கு ஆளாக்க விரும்பினோம். அதிர்ஷ்டவசமாக எங்களால் அதனை செய்ய முடிந்தது. இது போன்ற நாள் எல்லா அணிகளுக்கும் நடக்கும். நல்ல வேலையாக நாங்கள் வெற்றி பெறும் அணியாக இருந்தோம்.

இது போன்ற நாட்களில் தான் பந்து பேட்டில் படும்போது பில்டர்கள் கையில் நேராக பந்து செல்லும். ட்ராவிஸ் ஹெட் மற்றும் மார்ஷ் விளையாடிய விதம் நிச்சயமாக பாராட்டத்தக்கும் வகையில் இருந்தது. அவர்கள் தொடர்ந்து அதிரடியாக விளையாடிக் கொண்டே இருந்தார்கள். முதல் போட்டியில் தோல்வியை தழுவிய பிறகு எங்களால் மீண்டும் இந்தியாவை வீழ்த்த முடிந்து விட்டது. நான் கேட்ச் பிடித்தது குறித்து எனக்கு எதுவும் சொல்ல தெரியவில்லை.

நல்லவேளை பந்து எனது கையில் மாட்டிக் கொண்டது. நிச்சயமாக அது பெரிய விக்கெட் தான். ஏனென்றால் ஹர்திக் பாண்டியா தனி ஆளாகவே ஆட்டத்தை மாற்றி விடுவார். இதனால் அதனை ஒரு திருப்புமுனையாகவே சொல்லலாம்” என தெரிவித்துள்ளார். தற்போது மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்ற நிலையில் கடைசி ஆட்டம் வரும் புதன்கிழமை சென்னையில் நடைபெறுகிறது .


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement