Advertisement

ஸ்லோ ஓவர் ரேட்; மூன்றாவது முறையாக பாகிஸ்தான் அணிக்கு அபராதம் விதித்தது ஐசிசி!

நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் பந்துவீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதாக பாகிஸ்தான் வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement
ஸ்லோ ஓவர் ரேட்; மூன்றாவது முறையாக பாகிஸ்தான் அணிக்கு அபராதம் விதித்தது ஐசிசி!
ஸ்லோ ஓவர் ரேட்; மூன்றாவது முறையாக பாகிஸ்தான் அணிக்கு அபராதம் விதித்தது ஐசிசி! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Apr 07, 2025 • 08:41 PM

பாகிஸ்தான் அணி சமீபத்தில் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த டி20 தொடரை நியூசிலாந்து அணி 4-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
April 07, 2025 • 08:41 PM

இதனையடுத்து நடந்து முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் நியூசிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்து அசத்தியுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மவுண்ட் மாங்னூயில் நேற்று முந்தினம் நடைபெற்றது. மழை  காரணமாக தமதமாக தொடங்கிய இப்போட்டியானது 42 ஓவர்களாக குறைக்கப்பட்டு நடைபெற்றது. 

Trending

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர் ரைஸ் மாரியூ அரைசதம் கடந்து அசத்தினார். இதில் அவர் 58 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழக்க, இறுதியில் அதிரடியாக விளையாடிய கேப்டன் மைக்கேல் பிரேஸ்வெலும் அரைசதம் கடந்ததுடன் 59 ரன்களைச் சேர்த்து அசத்தினார். இதன்மூலம் நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 42 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 264 ரன்களைச் சேர்த்தது. 

பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணியில் பாபர் ஆசாம் 50 ரன்களையும், முகமது ரிஸ்வான் 37 ரன்களையும், அப்துல்லா ஷஃபிக் 33 மற்றும் தயப் தாஹிர் தலா 33 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க தவறினர். இதனால் பாகிஸ்தான் அணி 40 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன் 221 ரன்களில் ஆல் அவுட்டானது.  இதன்மூலம் நியூசிலாந்து அணி இப்போட்டியிலும் வெற்றிப் பெற்று அசத்தியது. 

இந்நிலையில் இப்போட்டியிலும் பாகிஸ்தான் அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக ஐசிசி அபராதம் விதித்துள்ளது. அதன்படி நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் அனைத்து ஓவர்களையும் வீசி முடிக்கவில்லை. இதனையடுத்து இக்குற்றத்திற்காக பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு போட்டி கட்டணத்தில் 5 சதவீதம் அபராதமாக விதிக்கப்படுவதாக ஐசிசி அறிவித்துள்ளார். 

Also Read: Funding To Save Test Cricket

 மேற்கொண்டு பாகிஸ்தான் அணியின் கேப்டன் முகமது ரிஸ்வானும் குற்றத்தை ஒப்புக்கொண்டதன் காரணமாக மேற்கொண்டு விசாரணைக்கு ஆஜராக தேவையில்லை என்பதையும் ஐசிசி தெளிப்படுத்தியுள்ளது. முன்னதாக நடப்பு நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலிரண்டு ஒருநாள் போட்டிகளிலும் பாகிஸ்தான் வீரர்களுக்கு ஸ்லோ ஓவர் ரேட் காரணமாக அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், தற்போது மூன்றாவது முறையாகவும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement