
ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் நேற்று பலப்பரீட்சை நடத்தினர். இந்த போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய அணியானது 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி ஆறாவது முறையாக ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பையில் சாம்பியன் பட்டத்தை வென்றது.
நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ர ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணியானது ஆஸ்திரேலிய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 50 ஓவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இருந்து 240 ரன்கள் மட்டுமே குவித்தது. இந்திய அணி சார்பாக விராட் கோலி 54 ரன்களையும், கே.எல் ராகுல் 66 ரன்களையும் குவித்தனர்.
பின்னர் 241 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலியா அணி 43 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 241 ரன்கள் குவித்து ஆறு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் அடைந்த தோல்விக்கு பின்னர் இந்திய அணியின் வீரர்கள் மைதானத்திலேயே கண்ணீர் விட்ட காட்சிகளையும் நம்மால் காண முடிந்தது. குறிப்பாக ரோஹித் சர்மா, விராட் கோலி, முஹமது சிராஜ் போன்ற வீரர்கள் மிகவும் வருத்தத்துடனும், சோகத்துடனும் மைதானத்தில் காணப்பட்டனர்.
Unfortunately yesterday was not our day. I would like to thank all Indians for supporting our team and me throughout the tournament. Thankful to PM @narendramodi for specially coming to the dressing room and raising our spirits. We will bounce back! pic.twitter.com/Aev27mzni5
— (@MdShami11) November 20, 2023