Advertisement

ரோஹித் சர்மா அழுத்தத்தை எடுத்துக் கொள்வார் இல்லை அதைச் சமாளிப்பார் - ரிக்கி பாண்டிங்!

ரோஹித் சர்மா அழுத்தத்தை எடுத்துக் கொள்வார் இல்லை அதைச் சமாளிப்பார். விராட் கோலியை எடுத்துக் கொண்டால் அவர் கொஞ்சம் உணர்வுபூர்வமானவர் என ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan October 17, 2023 • 14:48 PM
ரோஹித் சர்மா அழுத்தத்தை எடுத்துக் கொள்வார் இல்லை அதைச் சமாளிப்பார் - ரிக்கி பாண்டிங்!
ரோஹித் சர்மா அழுத்தத்தை எடுத்துக் கொள்வார் இல்லை அதைச் சமாளிப்பார் - ரிக்கி பாண்டிங்! (Image Source: Google)
Advertisement

2021ஆம் ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்டில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி முதல் சுற்றோடு வெளியேறியதில் இருந்து, விராட் கோலியின் கேப்டன் பதவி ஒவ்வொரு வடிவத்திலாக முடிவுக்கு வந்தது. இதற்குப் பின் விராட் கோலி ஒரு வீரராக இந்திய அணிக்கு பேட்ஸ்மேன் ஆக மட்டும் இல்லாமல் ஒரு ஊக்க சக்தியாகவும் சிறப்பான பங்களிப்பை களத்தில் வெளிப்படுத்தி வருகிறார். மேலும் அவர் இழந்திருந்த பேட்டிங் பார்மையும் மீட்டெடுத்து விட்டார்.

இந்த நிலையில் தற்போது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் முன்னணி வீரர்கள் அனைவரும் காயம் குணமடைந்து ஒன்று சேர்ந்து விளையாடி வருகிறார்கள். இவர்கள் ஒருங்கிணைந்த அணியாக இருக்கும் பொழுது மிகவும் அபாயகரமான அணியாக வெளிப்படுகிறார்கள். இதற்கு முன் வீரர்களின் காயம் இந்திய அணியை மிகவும் கீழாக காட்டியது. 

Trending


இதன் காரணமாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவும் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி வந்தார்கள். தற்பொழுது அவர்களின் முயற்சிகளுக்கான பலன் கிடைத்திருக்கிறது. ரோஹித் சர்மா கேப்டன்சி குறித்து பேசிய ரிக்கி பாண்டிங் பேசும்பொழுது “அவர் எப்பொழுதும் இயல்பாக இருக்கிறார். அவர் விளையாடும் விதத்தில் கூட நீங்கள் அதைக் காணலாம். அவர் ஒரு அழகான லாகோனிக் பேட்ஸ்மேன். அதேபோல் அவர் களத்திற்கு உள்ளேயும் வெளியேயும் இருக்கிறார்.

ஒரு கட்டத்தில் அவர்களுக்கு அழுத்தம் வராது அல்லது அழுத்தம் அவர்களை பாதிக்காது என்று நம்மால் சொல்ல முடியாது. ஏனென்றால் போட்டியின் மகத்தான தன்மை அதுதான். ஆனால் ரோஹித் சர்மா அழுத்தத்தை எடுத்துக் கொள்வார் இல்லை அதைச் சமாளிப்பார். விராட் கோலியை எடுத்துக் கொண்டால் அவர் கொஞ்சம் உணர்வுபூர்வமானவர். ரசிகர்களின் பேச்சுக்கு அவர் இன்னும் கொஞ்சம் அதிகமாக விளையாடக் கூடியவர். அவருடைய ஆளுமைக்கு அது கடினமான ஒன்றாக இருக்கலாம்.

ஆனால் நான் நினைக்கிறேன் ரோஹித் இதற்கு மிகவும் சரியானவராக இருக்கக் கூடியவர். அவர் ஒரு பயங்கரமான ஆட்டக்காரராகவும் இருக்கிறார். நீண்ட காலமாக இந்திய அணிக்கு ஒரு சிறந்த வீரராகவும் இருந்து வருகிறார். மேலும் கேப்டனாகவும் அவர் இந்திய அணிக்கு சிறந்ததை செய்து கொண்டிருக்கிறார்!” என்று கூறியுள்ளார். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement