Advertisement
Advertisement
Advertisement

இந்தூர் டெஸ்டிற்கு பிறகு விராட் கோலியிடம் நான் கூறிய அட்வைஸ் இதுதான் - ரவிச்சந்திரன் அஸ்வின்!

மூன்றாவது டெஸ்ட் போட்டி முடிந்தவுடன், நான் விராட் கோலியிடம் பேசியபோது என்ன சொன்னேன்? என்பதை பேட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan March 15, 2023 • 10:27 AM
R Ashwin opens up about his conversation with Virat Kohli after Indore Test!
R Ashwin opens up about his conversation with Virat Kohli after Indore Test! (Image Source: Google)
Advertisement

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளிடையே நடைபெற்ற நான்காவது டெஸ்ட் போட்டி இந்திய அணிக்கு சாதகமாக முடியவில்லை. இரு அணிகளும் சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்தியதால் போட்டி டிராவில் முடிந்தது. இருப்பினும் இந்திய அணி 2-1 என பார்டர் கவாஸ்கர் கோப்பையை வென்றது. 4ஆவது டெஸ்ட் போட்டியில் மகிழ்ச்சி தரும் விதமாக அமைந்த ஒரே விஷயம், கிட்டத்தட்ட 1200 நாட்களுக்குப் பிறகு விராட் கோலி சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் சதம் அடித்தார். 

கடைசியில் இரட்டை சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டாலும், நீண்ட இடைவெளிக்கு பிறகு இவர் சதம் அடித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அணி நிர்வாகத்திற்கும் ரசிகர்களுக்கும் கொடுத்தது. கடைசியாக வங்கதேச அணிக்கு எதிராக நவம்பர், 2019ஆம் ஆண்டு டெஸ்டில் சதம் அடித்தார். முன்னர் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் சதமடித்து பழைய பார்மிற்கு திரும்பினார். தற்போது டெஸ்டிலும் பார்மிற்கு வந்திருப்பது அணிக்கு சிறப்பான ஒன்றாக இருக்கிறது.

Trending


போட்டி முடிந்த பிறகு இந்த சதத்தை பற்றி பேசிய விராட் கோலி, பேட்டிங்கில் நல்ல நிலையில் தான் இருந்தேன். சரியாக பேட்டிங் செய்யவில்லை என்று நான் உணரவில்லை. கடந்த காலங்களில் நான் செய்ததற்கு இணையாக செய்யவில்லை என்று மட்டுமே தெரிந்தது. மேலும், நான் அடிக்கும் 40-50 ரன்கள் ஏன் 150 ரன்களாக மாறவில்லை என்ற எண்ணம் நீண்ட காலமாக உறுத்திக்கொண்டே இருந்தது. நான் 40-50 ரன்கள் அடிக்கும் ஆள் நான் இல்லை.” என ராகுல் டிராவிட் உடன் நடந்த உரையாடலில் விராட் கோலி பேசினார்.

இத்தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்தது. அதன்பிறகு ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் விராட் கோலி இடையே உரையாடல்கள் நிகழ்ந்திருக்கிறது. இதைப்பற்றி தனது பேட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியுள்ளார்.

அதில், “இந்தூர் டெஸ்ட் முடிந்தபிறகு நானும் விராட் கோலியும் பேசிக்கொண்டோம். பொதுவாக இருவரும் நிறைய பேசிக் கொள்ளமாட்டோம். ஆனால் அந்த டெஸ்ட் போட்டிக்குப் பிறகு நான் அவரிடம் பேச வேண்டும் என்று எண்ணினேன். இந்த தொடர் முழுவதும் விராட் கோலி நன்றாக பேட்டிங் செய்ததாக நான் உணர்ந்தேன். நன்றாக நேரம் எடுத்துக்கொண்டு விளையாடினார். 30, 40 ரன்களில் ஆட்டமிழந்து வந்தார்.

இக்கட்டான நேரத்தில், தோலுக்கு துணையாக இருப்பது எந்த அளவிற்கு நம்பிக்கை கொடுக்கும் என்று நானும் உணர்ந்திருக்கிறேன். எனது கிரிக்கெட் வாழ்க்கையிலும் உதவியிருக்கிறது. நான் அவரிடம், ‘நீ நன்றாக பேட்டிங் செய்கிறார். இன்னும் கூடுதல் நேரம் களத்தில் நின்று விளையாடு, நிச்சயம் மாற்றம் கிடைக்கும்.’ என்று எடுத்துரைக்க நினைத்து பேசினேன். விரைவில் சதமடிப்பார், அது அடுத்த டெஸ்டில் கூட நடக்கலாம் என்று நினைத்துக்கொண்டே அவரிடம் பேசிவந்தேன். அது நிகழ்ந்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.

புஜாரா மற்றும் விராட் கோலி ஆகியோர் அணிக்கு ரன்கள் அடித்தால் எந்த அளவிற்கு போட்டியில் தாக்கம் ஏற்படும் என்று தெரியும். இந்த தொடரில் அவர்கள் நல்லவிதமாக விளையாடியது மகிழ்ச்சியை கொடுக்கிறது. விராட் கோலி, புஜாரா மற்றும் ரோகித் சர்மா ஆகியோரின் பேட்டிங்கை பார்த்துக்கொண்டே இருக்கலாம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement