
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட 50 ஓவர் கிரிக்கெட் தொடர் இறுதிகட்டத்தை எட்டிவிட்டது. முதல் 2 போட்டிகளில் வெற்றி கண்டு இந்தியா தொடரை வென்றுவிட்டது. இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையே 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறவுள்ளது. இந்த முறையும் சீனியர் வீரர்களான விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்டோருக்கு வாய்ப்பு தரப்படவில்லை.
கடந்தாண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை டி20 தொடர் மூலம் தான் விராட் கோலி கம்பேக்கே கொடுத்திருந்தார். டி20 உலகக்கோப்பையில் அதிக ரன் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார். அப்படிபட்ட வீரர் ஒதுக்கப்பட்டு வருவதால் ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர். மறுபுறம் இனி சீனியர் வீரர்கள் டி20 திட்டத்தில் இல்லை என பிசிசிஐ கூறி வருகிறது.
இந்நிலையில் இதுகுறித்து டிராவிட் விளக்கம் தந்துள்ளார். டிராவிட்டிடம், கடந்தாண்டு வரை டி20 அணியில் விராட் கோலியின் இடம் கேள்விக்குறியாக இருந்தது என செய்தியாளர் கேள்வி கேட்க தொடங்கினார். உடனடியாக குறிக்கிட்ட டிராவிட், எங்களால் அவரின் இடத்திற்கு சந்தேகம் தெரிவிக்கப்படவில்லையே, எங்களால் என்றுமே அப்படி நடக்காது என கூறினார்.