
இந்திய அணி ஆசியக்கோப்பையை வென்று வெற்றிகரமாக முடித்திருக்க, ஆஸ்திரேலியா அணி தென் ஆப்பிரிக்க அணியிடம் ஒருநாள் தொடரை இழந்திருக்கிறது. இந்த நிலையில் இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பைக்கு முன்பாக, இந்திய அணியுடன் இந்தியாவில் ஆஸ்திரேலிய அணி விளையாட இருக்கிறது.
இந்த மூன்று போர்டிகள் கொண்ட ஒரு நாள் தொடருக்கான ஆஸ்திரேலியா அணி நேற்று அறிவிக்கப்பட்டது. கேப்டன் கம்மின்ஸ், ஸ்மித், ஸ்டார்க், மேக்ஸ்வெல் என எல்லா நட்சத்திர வீரர்களும் திரும்பி வந்திருக்கிறார்கள். கூடவே ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் கழட்டி விடப்பட்டிருக்கிற மார்னஸ் லபுசேனும் வந்திருக்கிறார்.
இந்த நிலையில் உலகக் கோப்பை வெகு அருகில் இருக்க, தற்பொழுதுதான் ஆசிய கோப்பை தொடர் விளையாடி முடித்திருக்க, இந்திய அணிக்கு இது தேவையில்லாத தொடர் இன்று பலராலும் விமர்சிக்கப்பட்டு வந்தது.