
India vs England Lord’s Test: லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவதன் மூலம் இந்திய வீரர் ரிஷப் பந்த் சில சாதனைகளைப் படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது போட்டி நாளை லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடாரில் இதுவரை நடந்து முடிந்த இரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்ததுடன் 1-1 என்ற கணக்கில் தொடரை சமனிலும் வைத்துள்ளன. இதன் காரணமாக இப்போட்டியில் வெற்றிபெறும் அணி தொடரில் முன்னிலைப் பெறும்.
இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. மேலும் இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாகத் தயாராகியும் வருகின்றனர். இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணியின் துணைக்கேப்டனும், விக்கெட் கீப்பர் பேட்டருமான ரிஷப் பந்த் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் சர்வதேச டெஸ்டில் சில சாதானைகளைப் படைக்கும் வாய்ப்பையும் பெற்றுள்ளார்.